இலவச எண்: 1800-425-31111

ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்

அருமையான புனிதத் திருத்தலமான உலகளந்த பெருமாள் திருக்கோயிலின் கோபுர நுழைவாயில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மேலும் இதன் தாழ்வாரங்கள் புனிதமான பாடல்களின் சிம்பொனியுடன் வசீகரிக்கின்றன. மட்டுமன்றி இங்குள்ள கருவறையில் விவரிக்க முடியாத பிரகாசம் உள்ளது. அது உங்களை பக்தி மார்க்கத்தில் அசையாமல் நிற்க வைக்கும். ஸ்ரீ உலகளந்தப் பெருமாள் கோயில் என்பது பக்தர்கள் காணக் கிடைப்பதற்கரிய கண்கொள்ளாக் காட்சிகள் கொண்ட புனிதத்தலமாகும்.

சில கோயில்கள் முழுக்க முழுக்க வழிபாட்டுத் தலங்கள் என பெயர் பெற்றவை. இருப்பினும் சில கோயில்கள் அதன் கட்டிடக்கலை மூலம் உங்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்து உள்ளன. 

அழகான கட்டமைப்பு மற்றும் அற்புதமான நற்பண்புகள்-இவை அனைத்தும் ஒன்றிணைந்தால், தெய்வீகத்தின் ஒரு தனித்துவமான உணர்வு எழுகிறது. 

அது உங்களை மீண்டும் மீண்டும் அந்த இடத்திற்குச் செல்ல அழைக்கிறது. தமிழ் மற்றும் திராவிட கட்டிடக்கலைக்கு பொருத்தமான சான்றாக விளங்கும் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் அத்தகைய தலைசிறந்த படைப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

இது ஒரு காந்த ஈர்ப்பால் உங்களை வசீகரிக்கும் இடம்.

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 புனிதமான ‘திவ்ய தேசங்களில்’ ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் இந்தோ-திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான இந்த வழிபாட்டுத் தலத்திற்கு பிரமாண்டமான மண்டபங்களும், சிக்கலான சிற்பங்களும் ஒன்றுகூடி உங்களை வரவேற்கும். 

இக்கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் இடைக்கால சோழர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் போது பல முறை மாற்றியமைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் இருப்பிடங்களின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் மிகவும் பழமையானது என்று நம்பப்படுகிறது. 

இக்கோயில் 60,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஏழு கலசங்களுடன் மூன்று முக்கிய கோபுரங்களைக் கொண்டுள்ளது. திருக்கார்வானம், திருகாரகம், திருஊரகம், திருநீரகம் உள்ளிட்ட நான்கு திவ்ய தேசங்களும் இக்கோயிலில் தனித்தன்மையுடன் உள்ளன.

திருவிக்ரமனான  விஷ்ணுவின் 10 முதன்மை அவதாரங்களில் ஒன்றான வாமனனின் மாபெரும் வடிவம், கோயிலில் வழிபடப்படுகிறது. உலகளந்த பெருமாளின் திருவுருவம் 35 அடிக்கு மேல் உயரம் கொண்டது. உயரமான கூரையானது தெய்வத்தின் அளவிற்கு ஏற்ப தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் இரண்டு முக்கிய திருவிழாக்கள் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் 'பிரம்மோத்ஸவம்' மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் 'வாமன ஜெயந்தி' ஆகும்.

KANCHEEPURAM
WEATHER
Kancheepuram Weather
31.1°C
Partly cloudy

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Kancheepuram

Kamatchi Amman Sannathi Street

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...