இலவச எண்: 1800-425-31111

மூணாறு அருகேயிருக்கும் கொளுக்குமலை குக்கிராமம்,தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிக உயரமான தேயிலை தோட்டமாக போற்றப்படுகிறது.

தொலைதூர மலைகளின் களிப்பூட்டும் காட்சியில் திளைத்து,  அங்கிருந்து மூடுபனி மலைகளுக்கு செல்ல உங்கள் ஆன்மா விரும்பினால்,கொளுக்குமலை, வார இறுதி விடுமுறை நாட்களுக்கு மிகச்சரியான இடமாகும் .  இது கடல் மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் இயற்கையின் மிக அழகிய காட்சிகளுடன் உங்கள் இதயத்தில் சிரமமின்றி இடம் பிடிக்கிறது. 

1900 களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட கொளுக்குமலை தேயிலை தோட்டம், மூணாறிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.  இங்குள்ள தேயிலை தொழிற்சாலை பாரம்பரிய முறைபடியே செல்படுவதால் அதன் புத்துணர்ச்சியூட்டும் விரும்பத்தக்க சுவை,இந்த இடத்தை இன்னும் சிறப்புடையதாக மாற்றியுள்ளது.

கொளுக்குமலையின் அழகான காட்சியை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது கட்டாயமாக பார்க்க வேண்டும். சாகச விரும்பிகள் கொளுக்குமலையில் நடைபயணம் மற்றும் முகாமிடவும் முயற்சி செய்யலாம்.

செய்ய வேண்டியவை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

வலைப்பூக்கள்

மலைகள் அழைக்கின்றன...

தமிழ்நாட்டின் இந்த ஐந்து அதிகம் அறியப்படாத ஆனால் அழகிய மலைவாசஸ்தலங்களைப் பாருங்கள், அவை நிச்சயமாக உங்களை மயக்கும். ஆராயப்படாதவற்றை ஆராயுங்கள்.

2 years ago

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...