இலவச எண்: 1800-425-31111

கைலாசநாதர் கோயில்

இக்கோயிலின் புனிதத்தின் மகத்துவம் இங்கு நீங்கள் உணரும்போது இது வெறும் கோயில் மட்டும் அல்ல. ஒரு உன்னதமான இடம் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இது ஒரு நினைவுச்சின்னத்தை விட அதிகம் புகழ் கொண்டது. கடந்த காலத்திலிருந்து பல கதைகளை நம் வருங்கால சந்ததியினருக்கு உரக்கச் சொல்லும் வரலாற்று கட்டிடக்கலையின் மகத்துவத்திற்கு இது ஒரு வாழும் சாட்சியம். கல்வெட்டுகள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கைலாசநாதர் கோயில் நம் இதயத்தில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

இக்கோயிலின் ஒவ்வொரு மூலையிலும் மகத்துவம் பொதிந்துள்ளது - அதுதான் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் ஆகும். 

பாரம்பரிய திராவிட கட்டிடக்கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றான இந்த கோயில், ஒப்பிடமுடியாத வசீகரத்தையும் நேர்த்தியையும் வெளிப்படுத்துகிறது. இந்த பழமையான பல்லவர் கால கோயில் கிபி 700 இல் இரண்டாம் நரசிம்ம வர்மனால் கட்டப்பட்டது. இந்துக் கோயில் கட்டிட கலையின் உச்சகட்ட நுணுக்கங்களுடன் செதுக்கப்பட்ட, வானளவு புகழ் பெற்ற இந்தக் கோயிலில் தமிழ்நாட்டின் ஆரம்பகால சுவரோவியக் கலைப் படைப்புகள் உள்ளன. 

கோயிலின் சுவர்களில் அமைந்துள்ள பல கல்வெட்டுகள் ஆதிகால எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு உள்ளன. அவை கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

பிராந்திய வரலாறு மற்றும் மரபுகள் பற்றிய ஆய்வும் இதில் அடங்கும்.

இக்கோயில் மணற்கற்களால் ஆனது. எனவே உள்ளூரில் மணல் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அஸ்திவாரங்கள் கிரானைட் கற்களால் ஆனவை. இது கோயிலின் பெரும் எடையைத் தாங்க உதவும்.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் சதுர வடிவில் உள்ளது. ஒரு பிரமாண்டமான நுழைவு மண்டபம், அற்புதமான கூட்டம் கூடும் ஒரு மண்டபம், நான்கு மாடி விமானத்துடன் கூடிய கருவறை இங்கு பிரபலமாக உள்ளன. 

பிரதான கருவறையைச் சுற்றி ஒன்பது சன்னதிகள் உள்ளன. வெளியில் ஏழு மற்றும் உள்ளே இரண்டு என அனைத்தும் சிவனின் வெவ்வேறு வடிவங்களை வணங்குகின்றன. இது மட்டுமன்றி இங்கு 58 சிறிய கோவில்கள் உள்ளன. கோவிலின் உட்புறப் பாதை கைலாசநாதர் எனும் சிவபெருமானின் திருவுருவச் சிலையை சுற்றி அமைந்துள்ளது. இது மட்டுமன்றி சொர்க்கத்திலிருந்து ஒரு நபர் நுழைவதையும் வெளியேறுவதையும் பூடகமாக குறிக்கிறது.

கருவறையில் 16 பக்க சிவலிங்கம் கருப்பு கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதான சன்னதியின் சுவர்களுக்குள் அமைந்துள்ள பாதபண்டா எனும் பிரதான பீடம், இறையனுபவத்தை வழங்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட தெய்வங்களின் செதுக்கப்பட்ட உருவங்கள் மற்றும் செதுக்கப்பட்ட நந்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரதான சன்னதியின் வெளிப்புறச் சுவர்களின் ஒவ்வொரு முகத்திலும் வெவ்வேறு தெய்வங்களின் பலரூப சிற்பங்கள் உள்ளன.

KANCHEEPURAM
WEATHER
Kancheepuram Weather
31.1°C
Partly cloudy

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Kancheepuram

Kamatchi Amman Sannathi Street

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...