இலவச எண்: 1800-425-31111

உதகமண்டலம் ஏரி

உதகை படகு இல்லம் என்றும் அழைக்கப்படும் அழகிய உதகை ஏரி, அமைதியான பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகும். உதகை ஏரி என்பது 1824 ஆம் ஆண்டு ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்ட செயற்கையான ஏரியாகும்.

கம்பீரமான உயரமான தைல (யூகலிப்டஸ்) மரங்களாலும், கரையோர பச்சைப் புதர்களாலும் சூழப்பட்ட உதகை ஏரி நீலகிரி மாவட்டத்தில், மனதை ஈர்க்கக்கூடிய இடமாகும்.  65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி முதலில் மீன்பிடிப்பிற்காக கட்டப்பட்டது.  பின்னர் 1973-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இதனைக் கையகப்படுத்தியபோது சுற்றுலாப் பூங்காவாக மாற்றப்பட்டது. 

உதகை ஏரியில் சுற்றுலாப் பயணிகள் அனுபவிப்பதற்கு  பல வேடிக்கையான செயல்கள் உள்ளன.  ஏரியைச் சுற்றி பயணம் செல்ல சைக்கிள்கள் வாடகைக்கு உண்டு.  படகு சவாரி முக்கியமான கவர்ச்சியாகும்.  நீர்நிலைகள் வழியாக அமைதியான சவாரி செய்வது ஒரு கவர்ச்சியான பொழுதுபோக்காக உள்ளது, ஏனெனில் இது ஏரியின் முழு அழகையும் ஒருவருக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.  துடுப்பு படகு-, மோட்டார் படகு- மற்றும் படகோட்டுதல் படகு சேவைகளும் இங்கு உள்ளன.  சவாரி சுற்றிலும் அமைதியான பசுமை மற்றும் தொலைதூர மலைகளின் காட்சியை வழங்குகிறது இந்த ஏரி. 

மே மாதம் இங்கு நடத்தப்படும் கோடை விழாவின் ஒரு பகுதியாக படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

அருகில் ஒரு தோட்டம், ஒரு சிறு ரயில் மற்றும் ஒரு பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.  கேளிக்கை பூங்காவில் பேய் வீடு, கண்ணாடி வீடு மற்றும் குதிரை சவாரி போன்ற வேடிக்கையான செயல்பாடுகள் உள்ளன, மேலும் குழந்தைகளுக்கு உற்சாகமான அனுபவத்தை இவைகள் வழங்குகிறது.

செய்ய வேண்டியவை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

உறைவிடம்

Hotel Tamilnadu - Ooty I

TTDC, Upper Bazar

Youth Hostel - Ooty

171, Church Hill Road, Pudumund

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...