இலவச எண்: 1800-425-31111

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அழகிய மலைகள், பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், இவை அனைத்தும் உள்ளது. இந்த மகத்தான இடம் குறைவாகவே பார்வையிடப்பட்டுள்ளது, ஆனால் அதுவே இந்த இடத்தை கட்டாயமாக பார்க்க வேண்டிய இடமாக மாற்றியுள்ளது இப்போது.

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் மைசூர், ஊட்டி மற்றும் கோழிக்கோடு நகரங்கள் சந்திக்கும் இடத்தில், கூடலூர் அமைந்துள்ளது.  கூடலூரைச் சுற்றி பல அற்புதமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன, பயணத்தை உயிர்மூச்சாக விரும்புகிறவர்கள் இந்த இடத்தை தவறவிடுவது பிழையாகும்.

கூடலூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் இயற்கை காதலர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் சொர்கமாக இருக்கிறது.ஏனெனில் இது வனவிலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலே பார்க்க அனுமதிக்கிறது.  மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முதுமலை காப்புக்காடு, புலி, சிறுத்தை, இந்திய யானைகள் போன்ற வனவிலங்குகளைக் காணக்கூடிய பரபரப்பான வனவிலங்கு சஃபாரிகளுக்கு சரியான இடமாகும் .  இங்கு காணப்படும் 266 வகையான பறவைகளில் ஆபத்தான நிலையில் உள்ள இந்திய வெள்ளைக் கழுகு மற்றும் நீளமான கழுகு ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதில் பறவை பார்வையாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம்.

மைசூரிலிருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையில் ஊசி பாறை காட்சிக்கோணம் உள்ளது, இது கூடலூர், முதுமலை தேசிய பூங்கா மற்றும் பந்திப்பூர் ஆகியவற்றின் அழகிய காட்சிகளை வழங்குகிறது.  அதன் கூம்பு வடிவம் காரணமாக தமிழில் ஊசி மலை என்று அழைக்கப்படுகிறது, ஊசி பாறை காட்சிக்கோணம், அதன் கண்கவர் காட்சிகளுக்கு பெயர் பெற்றது, குறிப்பாக சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது.  மேகங்களால் சூழப்பட்ட மலைகள் மற்றும் அடர்ந்த தைல மரங்கள் சிறந்த பின்னணியை உருவாக்குகின்றன.பல தமிழ் திரைப்படங்களின் இந்த அற்புதமான தரிசனம் ஒரு காட்சியாக திரையாகி வருகின்றன. 

தவளை மலைகள், நீலகிரி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும், இது கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.  தூரத்திலிருந்து பார்க்கும் போது மலைகள் தவளையை ஒத்திருப்பதால் இப்பெயர் வந்தது.  வியந்து பார்க்கக்கூடிய பரந்து விரிந்த தேயிலை தோட்டம், பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் மலைகளில் இருக்கும் சிறிய கிராமங்களின் காட்சி, இவை யாவும் ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை உங்களுக்கு தரும்.

கூடலூருக்கு அருகில் உள்ள மற்றுமொரு சந்தன மலை முருகன் கோவில் மலைகளின் மேல் அமைந்துள்ளது.  முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இந்து கோவில், பசுமையான அடர்ந்த காடுகள் மற்றும் வளைந்த நீரோடைகளால் சூழப்பட்டுள்ளது.

நம்பலாக்கோட்டை 3513 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மற்றொரு கோயில் ஆகும், இது ஒரு பழங்கால சன்னதியின் அனைத்து அழகுகளையும் கொண்டுள்ளது.  சுமார் 1700 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படும் இந்த ஆலயம் மாண்டாடன் செட்டி சமூகத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பழங்குடியின கடவுள் பெத்தராயசுவாமிக்கு (வேட்டையாடுபவர்களின் இறைவன்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  வசீகரிக்கும் நீலகிரி மலைகளுக்கு மத்தியில் ஓடும் பைக்காரா  நதி, மலைகளின் பரந்த விரிந்த மூச்சடைக்கக்கூடிய காட்சிகளையும், இந்த இடத்தையும் புனிதத் தலமாக மாற்றுகிறது.

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

தமிழ்நாட்டின் சுவைகள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...