இலவச எண்: 1800-425-31111

பலதரப்பட்ட அனுபவங்களின் சங்கமமான கடலூர், உங்களுக்கு அருமையான பல நல்ல நினைவுகளை சாத்தியமாக்கும் ஒரு ஸ்தலம் - ஓய்வெடுக்கவோ அல்லது வேறொரு ஊருக்கும் செல்லும் வழியில் இளைப்பாறவோ கடலூரை நீங்கள் அடைந்தால், உங்கள் உள்ளத்தை புத்துயிர் பெறச் செய்யும் உன்னதமான அனுபவங்களை வழங்கும் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள தயாராகுங்கள். செழுமையான வரலாறும் மறக்க முடியாத மகிழ்ச்சியும் கொண்ட ஊர் கடலூர்.

கடற்கரைகள், ஏரிகள், கோவில்கள், காடுகள் - உங்களுக்கு எது வேண்டுமோ? அது எப்படியிருந்தாலும், கடலூர் அதன் பழமையான வசீகரம் மற்றும் மன அமைதியைத் தரும் இடங்களுடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது. மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 190 கிமீ தொலைவில் அமைந்துள்ள கடலூர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அதன் அற்புதமான இடங்களின் மகிமையால், நம்பி வந்த பார்வையாளர்கள் யாரும் இங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதில்லை.

கடலூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். பல ராஜ வம்சங்கள் பல நூற்றாண்டுகளாக இந்தப் பகுதியை ஆண்டுள்ளன. பல்லவர்கள், இடைக்கால சோழர்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள், மராட்டியர்கள் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட சில முக்கிய குழுவினர். பின்னர், கடலூரும் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இன்று, கடலூர் ஒரு துடிப்பான மற்றும் இளம் கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு தொழில்துறை நகரமாக திகழ்கிறது. கடலூர் என்ற சொல் சங்கமம் என்று பொருள்படும் கூடலூர் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது. நகரத்தின் சுற்றுலா முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை. இங்கு பயணிகளுக்கு பலவிதமான அனுபவங்கள் ஒன்றிணைந்து, மறக்க முடியாத நினைவுகளை பரிசாக அளிக்கின்றன. தமிழ்நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கடலூர், வங்காள விரிகுடாவின் அமைதியான கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ளது. 

எனவே இந்த இடம் அழகிய கடற்கரைகளின் அமைதியான அழகைக் கொண்டுள்ளது. கெடிலம் ஆறு கடலூர் வழியாக வங்காள விரிகுடாவில் பாய்ந்து, அதன் உப்பளங்களை சுற்றுலா ஈர்க்கும் தளங்களாக மாற்றுகிறது. இதுமட்டுமன்றி, கடலூர் ஒரு புனித சுற்றுலா தலமாகவும் உள்ளது, ஏனெனில் இங்கு பல அற்புதமான கோயில்கள்,ஏனைய சமூகத்தினரின் வழிபாட்டு தளங்கள் உள்ளன. இதனால் இது 'கோவில்களின் தேசம்' என்ற புனைப்பெயரைப் பெற்றது.

CUDDALORE
WEATHER
Cuddalore Weather
25.8°C
Patchy rain nearby

பயண ஸ்தலங்கள்

பிச்சாவரம் காயல்

வங்காள விரிகுடாவின் மின்னும் கரையோரத்தில் அமைந்திருக்கும் பிச்சாவரம், தூய்மையான மயக்கும் அழகு நிறைந்த உலகத்திற்கு உங்களை அழைக்கிறது. புனித கோவில் நகரமான சிதம்பரத்திலிருந்து வெறும் 30 நிமிடங்களில்‌ சென்றடையக் கூடிய கடற்கரை கிராமத்தில் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடான பிச்சாவரம் அமைந்துள்ளது. வெள்ளாறு மற்றும் கொலரூன் ஆறு இதன் எல்லைகளைத் தழுவிய நிலையில், பிச்சாவரத்தின் உப்பங்கழியானது கவர்ச்சியான பறவைகள் மற்றும் வசீகரிக்கும் வனப்பகுதிகளின் அதிசய பூமியாகும்.

மேலும் வாசிக்க

வீராணம் ஏரி கடலூர்

நமது மனதைத் தூய்மைப்படுத்தும் மந்திர சக்தி ஏரிகளுக்கு உண்டு. சோழ வம்சத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பாகக் கருதப்படும் வீராணம் ஏரி, இனிமையான மற்றும் வசதியான கடலோர வானிலையை அனுபவிக்க உங்கள் அன்பானவர்களுடன் செல்லக்கூடிய நன்கு அறியப்பட்ட சுற்றுலாத் தலமாகும்.

மேலும் வாசிக்க

சில்வர் பீச் கடலூர்

வானம் கடலைத் தொடும் காட்சி ஒரு பணிவான அனுபவமாகவும், மனதுக்கு இதமாகவும் இருக்கிறது. கடலூர் வெள்ளி கடற்கரை, அதன் பனோரமிக் அழகுடன் அதை மேலும் சிறப்பானதாக்குகிறது. இது இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ளது மற்றும் நகரத்தின் சலசலப்புகளால் பாதிக்கப்படாது.

மேலும் வாசிக்க

கடலூர்

கடலூர் என்ற சொல் சங்கமம் என்று பொருள்படும் கூடலூர் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது. நகரத்தின் சுற்றுலா முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை இது அறுதியிட்டு கூறவேண்டிய உண்மை. இங்கு பயணிகளுக்கு பலவிதமான அனுபவங்கள் ஒன்றிணைந்து, மறக்க முடியாத நினைவுகள் பரிசாக அமைகின்றன.

மேலும் வாசிக்க

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...